அரிய
புகைப்படங்கள்
(நன்றி: திரு.
ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி') |
பகுதி - 3 |
|
|
31.
குவளைக் கண்ணன்: முன்பின் பழக்கமில்லாத புதுவையில் நெருக்கடியான
சமயத்தில் முதன் முதலாக பாரதியின் உதவிக்கு வந்தவரும்,
பிற்காலத்தில் திருவல்லிக்கேணியில் யானை காலடியில் கிடந்த
பாரதியைக் காப்பாற்றியவருமான குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார்.
பாரதியார் பாடல்களில் மிகவும் போற்றப்பட்டவர். (1938-ல்
எடுத்த படம்) |
32.
அறிவாளி: புதுவை அறிவாளிகளின் ஒருவரும் பாரதியின் நண்பருமான
ஸ்வாமிநாத தீஷிதரும் புதல்வர்களும். படத்தில் வலமிருக்கும்
மூத்த புதல்வர் வி.எஸ்.குஞ்சிதபாதம் தம் பாரதி நினைவுகளை
'சுதேசமித்திர'னில் விரிவாக எழுதியுள்ளார் |
|
|
33.
ஏழ்மையிலும் உதவியர்: குவளைக் கண்ணன் மூலம் பாரதியை
அறிந்து, புதுவையில் ஆரம்ப நாட்கள் முதலே கவிஞருக்குப்
பேருதவி செய்த சுந்ரேசய்யர். தொழிலில் மணிலாக் கொட்டை
வர்த்தகக் கடையில் குமாஸ்தா. தமக்கு அதிக வருவாய் இல்லாதபோதும்,
தம்
மனைவியின் நகைகளை அடகுவத்துக்கூடப் பணம் உதவியவர் |
34.
புதுவை 'இந்தியா': புதுவை போன 'இந்தியா' முதல் வருஷம்
சிறிய அளவில் வெளிவந்தது. இந்தியாவின் லட்சியம் ஸ்வராஜ்யம்
என்ற உபதேசித்த தாதாபாய் நவுரோஜிகக 84 வயது பூர்த்தியாவதை
முன்னிட்டு 1909 ஸெப்டம்பர் 4-ந் தேதி, புதுவை 'இந்தியா'வின்
47-வது இதழில் தாதாபாய் படம் வெளியாயிற்று |
|
35.
காந்திப் பசு: தென் ஆப்பிரிக்க இந்தியத் தலைவர் மோ.க.காந்தியை
சத்தியமிக்க பசுவாகச்
சித்திரிக்கும் 'இந்தியா' கார்ட்டூன் 1908-ல் வெளியானது |
|
36.
'விஜயா' என்ற சென்னை தீவிர தேசியத் தமிழ்த் தினசரி 7.9.1909
முதல் புதுவையிலிருந்து வெளியாகுமேன்று கூறும் விளம்பரம்,
'இந்தியா' 4-9-1909 இதழில்
மற்றும் 'விஜயா' தலையங்கம்:வி.கிருஷ்ணஸ்வாமி ஐயர் நீதிபதிப்
பதவியை ஏற்றதற்காக அவரை கண்டிக்கும் 'விஜயா' தலையங்கம்.
பாரதி 'விஜயா'வுக்கும் ஆசிரியப் பொறுப்பு வகித்து வந்தார். |
|
|
37.
பாரதி இருந்த இல்லம்: 'புயற் காற்று' பாடலில் குறிக்கப்படுவது.
1938-ல் எடுத்த மேல் இடது படத்தில் உள்ளதுபோலவே 1953-ல்
எடுத்த வலது படத்திலும் வீட்டுச் சுவர்கள் நலிந்து உப்புப்
பூத்துக கொட்டுகிறது. |
|
|
38.
'இந்தியா' அச்சகம்: புதுவை 'இந்தியா' அலுவலகமும் அச்சகமும்
இச்சிறு கட்டடத்தில் இருந்தன. ஸரஸ்வதி அச்சகம் என்று
அக் காலத்தில் பெயர். (இப்படம் 1939-ல் எடுத்தது) |
39.
பாரதி இருந்த பெரிய வீடு: முன் பக்கத்திலுள்ள வீட்டைக்
காலி செய்தபின் பாரதி இருந்த பெரிய வீடு. 'சும்மா' என்ற
கட்டுரையில் பாரதி விவரிக்கம் வீடு இதுதான். இவ்வீடு
'விளக்கெண்ணெய்ச் செட்டியார்' என்று பாரதி அழைத்த ஒரு
செட்டியாருடையது. (1953-ல் எடுத்த படம்) |
|
|
40.
பாபு அரவிந்த கோஷ்: அரவிந்தர்,
1906-ல், அரசியல் தலைவராக இருந்தபோது. பாரதியின் யுக்தியைப்
பின்பற்றிப் புதுவை வந்தவர் அரவிந்தர் |
41.
வீர விளக்கு வ.வே.ஸு. அய்யர்: ஸீக்கியர், மகம்மதியர்
என்ற மாறு வேடங்களில் லண்டனிலிருந்து புதுவை வந்து சேர்ந்த
தேசபக்த வீரர் |
|
|
42.
சுப்பிரமணிய சிவா: தமிழ்நாட்டில் தேச பக்தியை வளர்த்த
பெரியார்களின் ஒருவரான சுப்பிரமணிய சிவா; இளமையில்,
தாடியின்றி, சிவா நடத்திய 'ஞான பாநு' பத்திரிகைக்கு
பாரதி தொடர்ச்சியாக
விஷயதானம் செய்துவந்தார் |
43.
சுப்பிரமணிய சிவா: தாடியுடனும், தம்மிடம் எப்போதும்
வைத்திருந்த பெரிய கைத் தடியுடனும். பாரதிக்கும் வ.உ.சி.க்கும்
நெருங்கிய நண்பரும் தேசீய ஊழியருமான சிவா சுதேசி இயக்கத்திலும்
பாரதி பாடல்களைப் பாடிப் பரப்புவதிலும் முக்கிய பங்கு
கொண்டவர் |
|
44.
அரவிந்தர் புகலிடம்: புதுவைக்கு ரகசியமாய் வந்த அரவிந்தர்
முதன் முதலில் கலவை சங்கர செட்டியார் வீட்டு மாடியில்
தங்கியிருந்தார் |