அரிய
புகைப்படங்கள்
(நன்றி: திரு.
ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி') |
பகுதி - 2 |
|
|
19.
'இந்தியா' ஸ்தாபகர் மண்டயம் நா.திருமலாச்சாரியார். தேசபக்தி
மிக்க பத்திரிகை நடத்த விரும்பிய இவருக்கு பாரதி தக்க
ஆசிரியராக வந்துசேர்ந்தார் |
20.
மண்டயம் ஸ்ரீநீவாஸாச் சாரியார்: 'இந்தியா'வை ஆரம்பித்து
நடத்திய குடும்பத்தைச் சேர்ந்த இவர் பாரதியிடன் தாமும்
புதுவையில் குடியேறினார்(1896-ல் எடுத்தப் படம்) |
|
|
21.
கலவரத்திற்கு முன் |
22.
கலவரத்திற்கு பின் |
|
23.
சூரத் காங்கிரஸ்: போய் வந்ததும் பாரதி வெளியிட்ட சிறு
பிரசுரத்தின் மேலட்டையும் முதல் பக்கமும் |
|
|
24.
வி.கிருஷ்ணசாமி ஐயர்: தம் அரசியல் எதிரி பாரதியின் தேசபத்திப்
பாடல்களில் சொக்கிப்போய் அவைகளை முதலில் அச்சிட்டு இலவசமாய்ப்
பரப்பிய வள்ளல் |
25.
கப்பலோட்டிய தமிழர்: சிறந்த தேசபக்தரும் பாரதியின் நண்பரும்
தீவிரவாதிகள் தலைவரும் பாரதி உதவி கொண்டு சுதேசிக் கப்பல்
கம்பெனி நிறுவியவருமான வ.உ.சிதம்பரம் பிள்ளை |
|
26.
'இந்தியா' அலுவலகம்: சென்னை பிராட்வேயில் 34-ம் எண்
இல்லம். இங்குள்ள படியில் பாரதி இறங்கி வரும்போதுதான்
'வாரண்டு'டன் வந்த போலீஸ்காரனைச் சந்தித்தார் |
|
27.
பாரதி வெளியிட்ட சிறு நூல்: சூரத் காங்கிரஸ் சென்று
திரும்பியபின் திலகர் கட்சியின் கொள்கைகளைப் பரப்ப பாரதி
1908-ல் வெளியிட்ட மற்றொரு பிரசுரத்தின்
முகப்புப் பக்கமும் முதல் பக்கமும் |
|
28.
கடற்கரைக் கூட்டம்: சென்னை திலகர் கூட்டத்தில்
ஒரு கூட்டம். இப்படம் பிற்காலத்தில் எடுக்கப்பெற்றதாயினும்,
பாரதி காலக் கூட்டங்களும் நேகமாய் இப்படியேதான் இருந்தன |
|
29.
புகழ் பெற்ற குடும்பம்: பாரதியை ஆதரித்த மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும்
(வலக்கோடி) குடும்பத்தினரும். இடமிருந்து வலம்: பார்த்தஸாரதி
(இளைய சகோதரர்), கிருஷ்ணமாச்சாரியார்(தந்தை,தேசபக்தி
மிகுந்தவர், 1890-91-ல் புதுவையில் 'இந்தியன் ரிபப்ளிக்'
என்ற பத்திரிகை ஆரம்பித்தவர்), எஸ்.திருமலாச்சாரியார்
(மூத்த சகோதரர், 'விஜயா' ஸ்தாபகர்), ஸ்ரீநிவாஸாச்சாரியார்.
(1897-ல் எடுத்த படம்) |
|
30.
சுரேந்திரநாத் ஆரியா: பாரதியின் ஆதிகாலத் தோழர், வன்மை
மிக்க பிரசங்கி, தீவிரவாதத் தலைவர். இவரது முழுப் பெயர்:
எஸ்.பி.யதிராஜ் சுரேந்திரநாத் வோகவி ஆரியா (சுமார் 1929-ல்
எடுத்த படம்) |