ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்
எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு
ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில்
இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன்
அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான்
எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச்
சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த
மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து
வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.
உனதன்பன்
சி.சுப்பிரமணிய பாரதி